காக்கையை
ஏமாற்றி உனக்கு
சோறூட்ட
முயல்கிறேன்...
நீயோ என்னை
ஏமாற்றி
காக்கைக்கு
சோறூட்டுகிறாய்...
எறும்பு முதல்
நிலவு வரை
அனைவரிடமும்
பேசிவிட்டு
நிம்மதியாய்
உறங்குகிறாய் நீ...
என்னதான்
பேசியிருப்பாயோ
என்று
உறக்கமில்லாமல்
நான்...
போதும் ரொம்ப
சிரிக்காதே கள்வா...
என் ஜாடிப் பூக்கள்
யாவும்
வாடிப்போகின்றன
உன் சிரிப்பிடம்
தோற்று...
இன்னும் சறிது
நேரம் அழுதால்
தேவதைகளும்
விசாரிக்க
வந்திடுவர்
அழாதே கண்ணா...
உன் கைபட்டு
மோட்சம் பெறவே
வரிசையில்
காத்திருக்கின்றன
பொம்மைகள்...
சரியான மாயக்காரன் நீ...
உன்னை கொஞ்சுபவரெல்லாம்
குழந்தையாக்குகிறாய்...
போதும் சிரித்து மழுப்பாதே...
இப்பொழுதாவது
சொல்லிவிடு
உன் கனவில்
வருவது யாரடா...
பல்லிரண்டு
போதுமா பாலகா...
பொம்மைகளை
துவம்சம் செய்ய...
ஒசாமா
உன்னுடன்
ஒரு நாள்
இருந்திருந்தால்
அமைதித் தூதன்
ஆகியிருப்பானோ...
செல்லக் குழந்தாய்...
என்னிடம் மட்டும்
ரகசியம் சொல்
நீ கடவுள்
குழந்தையா?
இல்லை கடவுளே நீ தானா...
ஏமாற்றி உனக்கு
சோறூட்ட
முயல்கிறேன்...
நீயோ என்னை
ஏமாற்றி
காக்கைக்கு
சோறூட்டுகிறாய்...
எறும்பு முதல்
நிலவு வரை
அனைவரிடமும்
பேசிவிட்டு
நிம்மதியாய்
உறங்குகிறாய் நீ...
என்னதான்
பேசியிருப்பாயோ
என்று
உறக்கமில்லாமல்
நான்...
போதும் ரொம்ப
சிரிக்காதே கள்வா...
என் ஜாடிப் பூக்கள்
யாவும்
வாடிப்போகின்றன
உன் சிரிப்பிடம்
தோற்று...
இன்னும் சறிது
நேரம் அழுதால்
தேவதைகளும்
விசாரிக்க
வந்திடுவர்
அழாதே கண்ணா...
உன் கைபட்டு
மோட்சம் பெறவே
வரிசையில்
காத்திருக்கின்றன
பொம்மைகள்...
சரியான மாயக்காரன் நீ...
உன்னை கொஞ்சுபவரெல்லாம்
குழந்தையாக்குகிறாய்...
போதும் சிரித்து மழுப்பாதே...
இப்பொழுதாவது
சொல்லிவிடு
உன் கனவில்
வருவது யாரடா...
பல்லிரண்டு
போதுமா பாலகா...
பொம்மைகளை
துவம்சம் செய்ய...
ஒசாமா
உன்னுடன்
ஒரு நாள்
இருந்திருந்தால்
அமைதித் தூதன்
ஆகியிருப்பானோ...
செல்லக் குழந்தாய்...
என்னிடம் மட்டும்
ரகசியம் சொல்
நீ கடவுள்
குழந்தையா?
இல்லை கடவுளே நீ தானா...

No comments:
Post a Comment