உழைப்பை சுரண்ட ஆங்கிலேயர் இல்லை-
முதலாளிகள் உண்டு..
ஆதிக்கம் செலுத்த அரசர்கள் இல்லை-
மத அரக்கர்கள் உண்டு..
குண்டு சப்தங்கள் இல்லை-
அவ்வப்போது துப்பாக்கி சப்தங்கள் உண்டு..
ரத்தம் சிந்தும் போர்கள் இல்லை-
உயிர் உறைய வைக்கும் பயங்கரவாதம் உண்டு..
விடுதலைக்காய் உயிர் துறக்க தேவையில்லை-
ஆனால் ஒரு வாய் சோற்றுக்காய் உயிர் துறக்க நேரிடலாம்..
இனி ஆங்கிலம் மட்டும் அறிவுமொழி இல்லை-
ஆனால் தேசிய மொழிகள் பேசாமொழிகள் ஆகலாம்..
அயல்தேச பிடியில் நாம் இல்லை-
ஆனால் வறுமை பிடியில் பலர்..
செய் அல்லது செத்துமடிய தேவை இல்லை-
ஆனால் ஏதும் செய்யவில்லை என்றால் பெண்கள் செத்துமடிய வாய்ப்புண்டு..
சத்தியாகிரகம் தேவையில்லை-
ஆனால் சத்தியம் கிரகம் ஆளவே தேவை..
சுதந்திரம் கிடைத்தது இன்று...
வேண்டும் விடுதலை என்று....??
No comments:
Post a Comment