20 Aug 2013

கொஞ்சம் நீ... கொஞ்சம் நான்...

வெள்ளை ரோஜா நீ
அவ்வப்போது கோவப்படுகையில்
சிகப்பு ரோஜாவாய்... 

இந்த ஆடை உடுத்துவதால் நீ அழகா இல்லை 
உன்னால் இந்த ஆடை அழகா... 

அடுத்த முறை வரும்போது 
வேப்பிலை கொண்டு வா 
உன்னைப் பார்த்தவுடனே 
எனக்கு பித்து பிடிக்கிறது...

உன்னைப்பற்றி அதிகமாய் நினைக்கும் பொழுதெல்லாம் 
மழை பெய்கிறது...
மழை பெய்யும்போதெல்லாம் உன்னைப் பற்றி 
அதிகமாய் நினைக்கிறேன்...
இனி வானிலை அறிக்கை நானே சொல்லிவிடவா...

காற்றை கொஞ்சம் கண்டித்து வை 
உன் தலை கோத எனக்கு மட்டுமே உரிமை உண்டென்று..

நீ.. நான்.. மழை..
இருவருக்குமாய் மழை பேசியது.. 
வா கொஞ்சம் மழைக்காக நாம் பேசுவோம் மௌனம் முறித்து...




வெற்றி 

No comments:

Post a Comment