13 Aug 2013

அம்மா


எத்தனை கவி பாடினும் வற்றாத தலைப்பு அம்மா..

வெள்ளை குணம்.. 

ரோஜா மனம் இவளுக்கு..

இவளின் அதிக பட்ச குழப்பம் 'நாளை என்ன சமைப்பது' என்பதே..

இவளது பெருங்கவலை என்றும் 'ஒழுங்காய் சாப்பிடவில்லை' 

என்பதாகத்தான் இருக்கும்.. 

intel box ல் நாம் முழ்கி இருக்க 

இவளுக்கு என்றும் idiot box தான் 

பொழுது போக்கு... 

இந்திய அணி வெற்றிக்கு நாம் மகிழ்ந்திருக்க

தோற்ற அணிக்கு வருந்தும் உள்ளம் 

அவளுக்கு மட்டுமே சொந்தம் ...

நமக்காக மட்டுமே இருக்கும் இவளது வேண்டுதல்கள் யாவும் ..

தனக்கென ஏதும் கேளாத இனியவள் அம்மா..

நம்புங்கள் தெய்வம் இப்பொழுதெல்லாம்  

கருவறையில் இருப்பதில்லை...

நாம் கை பிடித்து நடப்பதே  தெய்வத்துடன் தான்...

அம்மாவை போற்றுதும் அம்மாவை போற்றுதும்...


வெற்றி   



No comments:

Post a Comment